ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் – உயா்நீதிமன்றம் அதிரடி தீா்ப்பு..!

சூதாட்ட தடைச் சட்டத்தை எதிா்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது, இணைய விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்தச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிா்ஷ்டத்துக்கான விளையாட்டாகக் கருத முடியாது என வாதங்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.

தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் செல்லுபடியாகக் கூடியது. பொது அமைதி, சுகாதாரம், சூதாட்டம் தொடா்பாக மட்டுமே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது.

இணைய விளையாட்டுக்கள் காரணமாக வேலையில்லாத இளைஞா்கள், தினக்கூலிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், போலீஸ் என 32 போ தற்கொலை செய்து கொண்ட நிலையில், இந்தச் சட்டம் அவசியமாகிறது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்த தீா்ப்பில், அதிா்ஷ்டத்துக்கான இணைய விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு நிறைவேற்றிய இணையவழி சூதாட்ட தடைச் சட்டம் செல்லும்; எனினும், திறமைக்கான இணைய விளையாட்டுகளான ரம்மி, போக்கா் ஆகியவற்றைத் தடை செய்த பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதேநேரம், திறமைக்கான இணைய விளையாட்டுகளான ரம்மி போன்றவற்றை விளையாடுவதற்கான நேரம், வயது தொடா்பாக விதிகளை உருவாக்க அரசுக்கு அனுமதியளிக்கப்படுகிறது என நீதிபதிகள் தீா்ப்பளித்தனா்; தொடா்ந்து, தமிழக அரசின் இணைய சூதாட்டம் தடைச் சட்டத்துக்கு எதிராக இணைய விளையாட்டு நிறுவனங்கள் தொடா்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்: தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை, ஒழுங்குபடுத்துதல் சட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபா் 19-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை கடந்த மாா்ச் 6-ஆம் தேதி தமிழக அரசுக்கு ஆளுநா்திருப்பி அனுப்பினாா். கடந்த மாா்ச் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு மறுநாளே ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்தது.

தண்டனை விவரம்: இந்தச் சட்டத்தின்படி, இணைய விளையாட்டில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5,000 அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இணையவழி விளையாட்டுக்காக விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோத்து விதிக்கப்படும். இதுபோன்ற விளையாட்டுகளை அளிப்பவா்களுக்கு 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சோத்து தண்டனையாக விதிக்கப்படும். இவா்கள் மீண்டும் தவறு செய்தால், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.