கோவையில் 2 பெண் குழந்தைகளுடன் தாய் திடீர் மாயம்..!

கோவை: காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 42). இவரது மனைவி ரேவதி (36). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து, வெள்ளலூர் பேச்சி அம்மன் கோவில் வீதியில் வசித்து வருகின்றனர். இருவரும் பொள்ளாச்சி ரோடு டோல்கேட் அருகே ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றனர். குழந்தைகள் 2 பேரும் வெள்ளலூர் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10-ந் தேதி ரேவதி தனது கணவர் பன்னீர்செல்வத்திடம், இரண்டாவது மகள் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வென்றதாகவும், அதற்கான பரிசினை சென்னையில் உள்ள ஒரு அரங்கில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறி கொண்டு, 2 குழந்தைகளையும் அழைத்து சென்னைக்கு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பன்னீர்செல்வம் தனது மனைவி ரேவதியை தொலைபேசியில் அழைத்தார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அவர் போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரேவதி மற்றும் அவரது 2 குழந்தைகளை தேடி வருகின்றனர்.