தொழில் தொடங்கலாம் என கூறி பண மோசடி… கோவை ஓட்டலில் தலைமறைவாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் பரபரப்பு புகார்..!

கோவை ரத்தினபுரியை சேர்ந்த ராஜப்பன் இவரது மகன் ராஜசேகர் இவர் அடுப்புக்கரி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே ரஞ்சித் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக குடியிருந்து வந்தார். வாகனங்களுக்கு டயர் விற்பனை தொழில் செய்யலாம் என்று கூறி ரூபாய் 15 லட்சத்து  65 ஆயிரம் வாங்கி விட்டு மேலும் சிலரிடம் பணத்தை வாங்கி தலைமறைவானார். இந்நிலையில் கோவை ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் அவர் தங்கி இருந்ததை எதிர்பாராத விதமாக பாதிக்கப்பட்டவர்கள் பார்த்து உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் காட்டூர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். இதை அடுத்து அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து காவல் துறையினர் சோதனை செய்து விசாரணை நடத்தினர். அவர் தங்கி இருந்த அறையில் அவர் வைத்திருந்த பொருட்கள் மட்டும் உள்ளதாகவும் அவரை காணவில்லை என ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஹோட்டல் ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது