பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 18 ஆண்டு சிறை,1 ஆண்டு கடுங்காவல் தண்டனை..!

தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 18 ஆண்டு சிறை தண்டனை 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 50 வயது தந்தை கடந்த 2012 ஆம் ஆண்டு தனது சொந்த மகளையே பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வால்பாறை காவல் நிலைய காவல் துறையினர் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று எதிரி 51 வயது தந்தைக்கு ஆயுள் தண்டனை மற்றும் 18 ஆண்டு சிறை தண்டனை 1ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 2000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் சந்திரமோகன் ஆகியவர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், பாராட்டினார்.