மகளை கல்லூரியில் சேர்க்க பணம் இல்லாததால் தாய் தீக்குளித்து தற்கொலை..

மகளை கல்லூரியில் சேர்க்க பணம் இல்லாததால் தாய் தீக்குளித்து தற்கொலை.. கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி சாரதா ( வயது 43 )இவர்களின் மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்க விரும்பினார் .ஆனால் கல்லூரியில் சேர்க்க பணம் இல்லை.மகளை கல்லூரியில் சேர்க்க முடியாததால் மனம் உடைந்த சாரதா வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி திவைத்துக் கொண்டார்.இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் நேற்று சாரதா இறந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.