கோவையில் 3 புதிய போலீஸ் நிலையங்கள்..வருகிற 26 ஆம் தேதி டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைக்கிறார்..!

கோவையில் 3 புதிய போலீஸ் நிலையங்கள்..வருகிற 26 ஆம் தேதி டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைக்கிறார்..!கோவை மே 21கோவை மாநகரில் 15 சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இது தவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் , 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500 போலீசார் பணிபுரிகிறார்கள் கோவை மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது உள்ள போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கை போதாது என்றும் கூடுதல் போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை அடுத்து தமிழக முதல்அமைச்சர் மு. க. ஸ்டாலின் கோவை மாநகருக்கு சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம், பகுதிகளை மையமாகக் கொண்டு புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார் .இதையடுத்து இந்த போலீஸ் நிலையங் களுக்கான இடம் தேர்வு செய்யும் பணி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் 3 போலீஸ் நிலையங் களுக்கு தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் செயல்படும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டது தேர்வு செய்யப்பட்ட கட்டிடங்களில் ,இன்ஸ்பெக்டர்கள்,சப் இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர் அறை, கூட்ட அரங்கு, ஆயுதங்கள் வைத்திருக்கும் அறைஉள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் நடந்து வந்தது. மேலும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கும் தல 25 போலீசார் வீதம் மொத்தம் 75 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து மேற்கண்ட 3 போலீஸ்நிலையங்களில் திறப்பு விழாவருகிற 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை)நடக்க உள்ளது .இதில் தமிழக டி.ஜி.பி .சைலேந்திரபாபு கலந்துகொண்டு மேற்கண்ட 3 போலீஸ் நிலையங்களை திறந்து வைக்கிறார் .இதையடுத்து மாநகர நூண்ணறிவு போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் தாங்கள் சேகரிக்கும் பிரத்யேக தகவல்களை பதிவு செய்ய வசதியாக “ஆக்டோபஸ் ” எனும் புதிய மென்பொருளை டி.ஜி.பி. சைலேந்திரபாபு தொடங்கி வைக்கிறார் .இந்த புதிய மென்பொருள் மூலம் நுண்ணறிவு மற்றும் உளவுத்துறை போலீசார் சேகரிக்கும் தகவல்கள் ஒருவருக்கொருவர் எளிதாக பரிமாறி கொள்ள முடிவதுடன் சேமித்து வைக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..