கோவை சாலை விபத்தில் தாய் பலி- மகள் படுகாயம்..

கோவை காமராஜ்புரம் 4-வது வீதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் தீர்க்க தர்ஷினி (வயது 17) இவர் தனது தாயார் கலைவாணியுடன் (வயது 55) நேற்று வட கோவை- மேட்டுப்பாளையம் ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர்கள் மீது சென்ற மொபட் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் தாயார் கலைவாணி இறந்தார். மகள் தீர்க்கதர்ஷினி சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்..