மது குடிக்க மனைவி பணம் தராததால் கணவர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை புது சித்தாபுதூர் தனலட்சுமி நகர் பக்கம் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி ( வயது 42) ஒர்க்ஷாப் தொழிலாளி இவர் குடிப்பழக்கம் உடையவர்.நேற்று மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டார் . அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தனது மனைவியை அடித்தார். பின்னர் அவரது மனைவி வசந்தி டவுன்ஹாலுக்கு சாமான்கள் வாங்க சென்று விட்டார்.இந்த நிலையில் அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுப்பிரமணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து மனைவி வசந்தி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..