வரதட்சணை கேட்டு மனைவிக்கு டார்ச்சர் – கணவர் மீது புகார்..

கோவை ஒண்டிப்புதூர் ,சிவசக்தி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் மாதிரி (வயது 31) முதுநிலை பட்டதாரி. இவருக்கும் பிரதீப் மணிகண்டன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது மாதுரிக்கு பெற்றோர்கள் 50 பவுன் நகை போட்டனர்..மேலும் திருமணத்திற்காக ரூ.10 லட்சம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் மாதுரி முனைவர் பட்ட படிப்புக்காக காரைக்குடி சென்றார். அப்போது அவரை கணவர் மற்றும் குடும்பத்தினர் டார்ச்சர் செய்தனர். அவர் போட்டு வந்த 50 பவுன் நகைகளையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து மாதுரி கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கணவர் பிரதீப் மணிகண்டன் மற்றவர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..