குடிபோதையில் சாக்கடை கால்வாயில் விழுந்து தொழிலாளி சாவு…

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம்,மடாலயம் ரோட்டை சேர்ந்தவர்ரவி (வயது 37 )கட்டிட வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இந்த நிலையில் இவர் நேற்று சிவானந்தபுரம் சத்தி ரோட்டில் சாக்கடை கால்வாயில்இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.