இரும்பு திருடிய 3பேர் கைது…

கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி, புது பாலம் அருகே தனியார் கட்டுமான நிறுவனத்தின் சார்பில் கட்டட வேலை நடந்து வருகிறது. இதற்காக அங்கு இரும்பு ,சென்ட்ரிங் பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த இரும்பு பைப் போன்ற பொருட்களை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் ஜெகதீஷ் குமார் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துதயிர் இட்டேரி ரோட்டை சேர்ந்த மகேந்திரன் ( வயது 45) அண்ணா நகர் பாலகிருஷ்ணன் ( வயது 36 )கே.கே. நகர் ரஹீம்( வயது 42) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இரும்பு கம்பிகள் மீட்கப்பட்டது.