கோவை குளத்தில் மூழ்கி வாலிபர் பலி..

கோவை செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் கண்ணன். அவரது மகன் கார்த்திகேயன் ( வயது 23) பிளம்பர் .இவர் நேற்று தனது நண்பர்களுடன் அங்குள்ள செல்வ சிந்தாமணி குளத்துக்கு குளிக்க சென்றார். குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஆழமான பகுதிக்கு சென்று விட்டதால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது தந்தை கண்ணன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.