கியாஸ் சிலிண்டர் டியூப் வெடித்து மூதாட்டி தீயில்கருகி சாவு.

கோவை மாவட்டம் பெரிய நெகமம், பல்லடம் ரோட்டில் உள்ள கே. வி .கே. நகரை சேர்ந்தவர் விவசாயி நடராஜன். இவரது மனைவி கலாமணி (வயது 63) அவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் டியூப் வெடித்து  தீப்பிடித்தது. இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று இறந்தார் .இது குறித்து அவரது கணவர் நடராஜன் நெகமம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.