ஐ.டி. பெண் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை..

கோவை சுந்தராபுரம், முதலியார் விதியை சேர்ந்தவர் சேகர் .இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .இவரது மகள் கவுசிகா (வயது 22) இவர் ஈச்சனாரியில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். தந்தை இறந்த பிறகு கடந்த 4 ஆண்டுகளாக தாத்தா வீட்டில் வசித்து வந்தார். இவர் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் சுடிதார் துப்பட்டாவை மின்விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து அவரது தாத்தா பழனியப்பன் (வயது 85) சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.