சேவல் சண்டை சூதாட்டம் – 18 பேர் கைது.!!

கோவை மாவட்டம் பேரூர் பக்கம் உள்ள பச்சாபாளையத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பேரூர் போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அறிவொளி நகரை சேர்ந்த பச்சையப்பன் ( வயது 24) பைசல் ( வயது 20 ) உக்கடம் ஜி. எம். நகர் .முகமது ஆசிக் (வயது 27) மன்சூர் (வயது 27) மதுக்கரை கணேஷ் குமார் (வயது 48) பேரூர் அரசு ( வயது42) ரவி ( வயது49) ஒண்டிப்புதூர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 38) பச்சாபாளையம் பொன்மணி ( வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 சேவல்களும் சூதாட பயன்படுத்தப்பட்ட பணமும் செய்யப்பட்டது.

இதே போல பொள்ளாச்சி ஆனைமலை பக்கம் உள்ள காளியாபுரம் சுடுகாடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக சோமநாதபுரம் மகேஷ் குமார் (வயது 53) உடைய குளம் தமிழ் வாணன் (வயது 20) கன்னியப்பன் ( வயது55) வேட்டைக்காரன் புதூர் அருண்குமார் ( வயது 27 )பகவதி (வயது 25 பட்டா கார்த்திக் ( வயது 24 ) ஆகியோர் கைது செய்யப்பட்டது. சேவல்களும் சூதாட பயன்படுத்தப்பட்ட 740 ரூபாயும், 7 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல நெகமம் வடக்கு தோட்ட பகுதியில்சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக வட சித்தூர் சிவக்குமார் (வயது 53) ஆண்டிபாளையம் மகேஸ்வரன் (வயது32) மன்றாம் பாளையம் சுந்தரராஜ் (வயது 35 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது..