டெங்கு கொசு புழுக்களை அழிக்கும் புகை மருந்து அடிக்கும் பணி தீவிரம்..!

தமிழ்நாடு மாநிலத்தில் ஒருசில இடங்களில் டெங்கு காய்ச்சல் பதிவாகியுள்ள நிலையில்  தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் எதிர்வரும் பருவமழையை கருத்தில் கொண்டு  டெங்கு பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சுதர்சனம்  ஆலோசனையின்படி புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலையன் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் தமிழ்செல்விரமேஷ் தலைமையில் புள்ளிலையன்  ஊராட்சியில் உள்ள குப்பாமணிதோப்பு, லையன், சாந்திகாலனி, புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரப்பட்டு பின்னர்  டெங்கு கொசுப் புழுக்களை அழிக்கும் புகை மருந்து அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.