கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாப பலி..

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூ.கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் பிரனேஸ் (வயது 13) அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தான் .குடியரசு தின விழா விடுமுறையையொட்டி நேற்று அங்குள்ள கிணற்றுக்கு நண்பர்களுடன் குளிக்க சென்றான். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தான். இது குறித்து அவரது தந்தை பிரவீன் குமார் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.