விபத்தில் பலியான கோவை நகை கடை அதிபர் குடும்பத்துக்கு ரூ 75. லட்சம் நஷ்ட ஈடு- நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

கோவை தாமஸ் வீதியைச் சேர்ந்தவர் புகழேந்தி ( வயது 47 )நகை கடை நடத்தி வந்தார்.இவரது மனைவி சைலா (வயது 45)இவர்கள் இருவரும் கடந்த 9 -11 -2018 அன்று காரில் போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரி இவர்கள் சென்ற கார் மீது மோதியது. இதில் நகைக்கடை அதிபர் புகழேந்தி அதே இடத்தில் பலியானார் .மனைவி சைலா படுகாயமடைந்தார். புகழேந்தியின் இறப்புக்கு ரூ 1 கோடியே 75 லட்சமும் சைலாவின் காயத்துக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு கேட்டு நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீதுதிருப்பூர் சிறப்பு மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது .விபத்தில் இறந்த நகைக் கடை அதிபர் புகழேந்தியின் இழப்புக்கு ரூ. 75 லட்சமும் படுகாயம் அடைந்த சைலாவுக்கு ரூ. 2 லட்சத்து 25 ஆயிரமும்,இழப்பீடு வழங்க நீதிபதி ஸ்ரீ குமார் உத்தரவிட்டார்.