திருமணமான 6 மாதத்தில் மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை..!

கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 42). தொழிலாளி. இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரிந்து சென்றார். இதனால் பிரபாகரன் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி கோளார்பட்டி சங்கம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 75). தொழிலாளி.
இவர் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று மணி மது வாங்கி திப்பம்பட்டி செக் டேம் பகுதியில் பாலத்தின் மீது அமர்ந்து மது குடித்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவர் பாலத்தில் இருந்து தவறி அனையில் விழுந்தார். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர். இதுகுறித்து கோமங்களம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.