நீலகிரி மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை 5000க்கும் மேலான இளைஞர்கள் பங்கேற்பு

நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம், உதகை என் சி எம் எஸ் மைதானத்தில் மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் அனைவரையும் வரவேற்றார்,
உதகைக்கு வருகை புரிந்த திமுக கழக இளைஞர் அணி செயல்வீரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு விழா அரங்கிற்குள் உற்சாக வரவேற்புடன் அழைத்து வரப்பட்டது விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த இளைஞர் அணியினர் உற்சாகத்துடன் கைகுலுக்கி கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.தமிழ்நாடு திமுக கழக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன், விளையாட்டுதுறை அமைச்சருமான இளைஞர்களின் எழுச்சி நாயகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றினார், விழாவில் திமுக கழக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆ.இராசா, கழக தேர்தல் பணி செயலாளரும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சருமான கா.ராமச்சந்திரன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் நவுபுல், பாபு, நாகராஜ், பத்மநாபன், வினோத்குமார், முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
உதகை இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவிலேயே கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிய ஒரே கட்சி தி.மு.க. தான்.தி.மு.க.வில் எத்தனை அணிகள் இருந்தாலும் முதன்மையான அணி இளைஞரணி தான்.
நாட்டிலேயே இளைஞரணி என்பது முதன் முதலில் தி.மு.க.வில் தான் தொடங்கப்பட்டது.2 மாதத்திற்கு முன்பு மதுரையில் மாநாடு நடந்தது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாது என்பதற்கு அந்த மாநாடே உதாரணம். மதுரையில் நடந்தது கேலிக்கூத்தான மாநாடு என்று பேசினார்,
பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம் தான். என்னை பற்றியே பேசி கொண்டிருக்கின்றனர்.நான் ஒரு அரங்கத்தில் பேசினேன். அதில் பிறப்பால அனைவரும் சமம் என்று மட்டுமே பேசினேன். ஆனால் நான் பேசாததை பேசியதாக திரித்து கூறி வருகின்றனர்.
எங்கு போனாலும் தி.மு.க.வை பற்றி பேசுவதே அமித்ஷாவுக்கு வேலையாக உள்ளது. பொய்
குற்றச்சாட்டுகளை சொல்வதில் அமித்ஷா வல்லவர்.அதுபோல பிரதமரும் இதையே பேசி வருகின்றனர் என்றார், ஒட்டுமொத்த தமிழ்நாடும் கலைஞரின் குடும்பம்தான் என்று புன்னகையுடன் கூறினார்.தன்னலம் பார்க்காமல் சுயநலம் பார்க்காமல் செயல்படுபவர்கள் தி.மு.க.வினர் தான்.தி.மு.க ஆட்சி அமைத்ததும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றார். தி.மு.க. அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது,மத்திய அரசு 9 வருடங்களில் செய்த ஊழல்களை
சி.ஏ.ஜி. அறிக்கையில் அம்பலமாகிவிட்டது. மத்திய அரசால் பலன் அடைந்தது என்று பார்த்தால் அது அதானி குடும்பம் மட்டுமே. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சியாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு உள்ளது. 2021 சட்டமன்ற தேர்தல் போன்று, 2024 பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

திமுகவில் 23 அணிகள் உள்ளன அதில் முதன்மையான அணி இளைஞர் அணி என்பதை அன்றே அறிஞர் கலைஞர், தலைவர் மு க ஸ்டாலின் அவர்களும் பாராட்டியுள்ளார் என்றார், அப்படி பெருமை பெற்ற இளைஞர் அணி இயக்கம் என்றார், முதல் இளைஞர் அணி மாநாட்டின் போது டாக்டர் கலைஞர் தலைவராகவும், இளைஞர் அணி மாநில செயலாளராக மு க ஸ்டாலின் அவர்கள் இறந்தார், அப்போது முதல் மாநாடு சென்னையில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்றது, தற்போது இரண்டாவது மாநாடு 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது, பொதுவாக ஒவ்வொரு தேர்தல் வருவதற்கு முன்னதாக ஒவ்வொரு இயக்கத்திலும் மாநாடுகள் நடைபெற உள்ளன, ஆனால் இயக்குகள் மட்டும் நடத்தும் அணிகளுக்கு அந்த பொறுப்புகளை கொடுக்க மாட்டார்கள், ஆனால் முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு தேர்தல் வருவதற்கு முன்னோட்டமாக ஒரு மிகப்பெரிய இளைஞர் அணி மாநாட்டை நடத்தி காட்ட வேண்டும் என்று தற்போதைய கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள் இளைஞர் அணிகளுக்கு அந்தப் பொறுப்பை கொடுத்திருக்கிறார் என்றால் உதயநிதி ஸ்டாலின் ஆகிய என் மீது அல்ல, உங்கள் ஒவ்வொருவர் மீதும் தலைவர் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை மட்டுமே, நம்மிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார், அதை நாம் நிரூபித்து காட்ட வேண்டும், நடைபெரும் இளைஞர் அணி மாநாட்டிற்கு அழைக்க வந்தேன், ஆனால் இங்கு பார்த்தால் என்னை விட எவ்வளவு ஆர்வத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கிறீர்கள், என்றுதெரிகிறது, என்று பேசினார், வரும் 2024 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் முழு வெற்றி பெற இளைஞர் அணி மாநாடு ஒரு முக்கியத்துவமாக உள்ளது, வரும் தேர்தலில் இளைஞர் அணி முக்கிய பங்காக உள்ளதால் மாநாட்டுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார், இந்த தேர்தலில் வெற்றி பெற நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேச்சை முடித்தார்,
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தை எழுச்சியுடன்
சிறப்பாக நடத்திய மாவட்ட கழக செயலாளர்
பா.மு. முபாரக் அவர்களுக்கு திமுக கழக இளைஞர் அணி
செயலாளரும், இளைஞர் நலன், விளையாட்டுதுறை
அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்
விழாமேடையிலேயே பாராட்டு தெரிவித்தார்
கூட்ட முடிவில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ் அனைவருக்கும் நன்றி கூறி விழா நிறைவு பெற்றது,