தடுப்புச் சுவரில் பைக் மோதி ஓட்டல் ஊழியர் பரிதாப பலி..

கோவை : திருச்சி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை ( வயது 42 )இவர் சூலூர் அருகே உள்ள காரணம்பேட்டையில் குடும்பத்துடன் தங்கி இருந்து  அங்குள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை செய்து வந்தார். நேற்று இவர் கோவை- திருச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலை தடுமாறி தடுப்புச் சுவரில் பைக் மோதி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் . அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.