சூலூர் மளிகை கடையில் 468 கிலோ குட்கா பறிமுதல் – வியாபாரி கைது..!

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி, அன்னை நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் முருகராஜ் ( வயது 48) இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ,இவரது கடையில் நேற்று சூலூர் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 468 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக முருகராஜ் கைது செய்யப்பட்டார் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.