தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் : அரசியல் காரணமா ? இங்கு உள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டம் : அரசியல் காரணமா ? இங்கு உள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும் – தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்

கோவை தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கான ஆளுநர் தமிழிசை பங்கேற்றார்.

இதில் அவர் பேசும்போது வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு செல்ல புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது,

புதிய சிந்தனைகளை கொண்டு வரவே தேசிய புதிய கல்விக் கொள்கையை பிரதமர் கொண்டு வந்தார். Start Up களில் இந்தியா உலக அரங்கில் 3 ஆம் இடத்தில் உள்ளது. மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும். வாழ்க்கை வரலாறுகளை மாணவர்கள் படிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார்.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பேட்டி:- 

டெக்னாலஜியுடன் கூடிய கல்வி தேவை என பிரதமர் சொல்லி இருக்கின்றார். இல்லை எனில் பின் தங்கி விடும் என்பதை சொல்லி இருக்கின்றார். நாடு வேகமாக வளர்ந்து வருகின்றது. ஜி 20 நாடுகளுக்கு தலைமை தாங்க போகின்றோம் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் நான் கருத்து சொல்ல முடியாது. இதை தமிழக ஆளுநரிடம் கேட்க வேண்டும். தமிழக ஆளூநர் சில விவரங்களை கேட்டு இருக்கின்றார். அமைச்சர்களும் விவரங்களை தெரிவித்து இருக்கின்றனர். ஆன் லைன் ரம்மி நடைபெற கூடாது என்பதில் அனைவருக்கும் ஒத்த கருத்து இருக்கின்றது. என்ன டெக்னிக்கல் காரணமாக அனுமதி வழங்கப்பட வில்லை என தெரியவில்லை. இதை தமிழக ஆளுநரிடம்தான் கேட்க வேண்டும்.

தெலுங்கானாவில் எந்த முரண்பாடும் இல்லை . அரசாங்கம் தான் முரண்பாடாக இருக்கிறது. ஆளுநரிடம் முரண்பாடு இல்லை என்னிடமும் சில மசோதாக்கள் நிலுவையில் இருக்கின்றது. அவற்றை தாமதப்படுத வேண்டும் என்று இல்லை. சில விபரங்களை கேட்டு இருக்கின்றோம்.

தெலுங்கானாவில் வேலை வாய்ப்பு தொடர்பான மசோதாவில் விபரங்களுக்காக நிறுத்தி வைத்து இருக்கின்றொம். அதில் சில மாற்றங்களுடன் கொண்டு வருகின்றனர். இது மக்களுக்கு பலன் கொடுக்கின்றதா ? என்பதை பார்த்து விட்டு கையெழுத்திட வேண்டும் இவற்றை தாமதம் என்று எடுத்து கொள்வதை விட கால அவகாசம் என எடுத்து கொள்ள வேண்டும். இது என்னை வைத்து சொல்கின்றேன். அரசியல் காரணத்திற்காக தெலுங்கானாவில் எனக்கு கவர்னர் உரை மறுக்கப்பட்ட போதும் பட்ஜெட் தாக்கலுக்கு எந்த இடையூறும் செய்யவில்லை. மக்கள்நலனை அடிப்படையாக வைத்து நான் இயங்கி வருகின்றேன். ஆனால் என்னை புரிந்து கொள்ளாமல் சிலர் இங்கே விமர்சிக்கின்றனர். மக்களை ஆளுநர்கள் சந்திக்கலாம். ஆளுநர்களை சந்திப்பதால் பல பிரச்சினைகள் தீர்ந்து இருக்கின்றது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சட்டத்திற்கு அனுமதி கொடுக்காதற்கு அரசியல் காரணமா என்பதை இங்குள்ள ஆளுநரிடம் கேட்டால் அதன் உண்மையான தன்மை தெரியும். இந்த சட்டத்தில் என்ன குறைபாடுகளை பார்த்தார் என்பதை அவரிடம் கேட்டால் தெரியும். தமிழக ஆளுநர் ஒரு மதத்தை சார்ந்து பேசுகின்றாரா என தெரியவில்லை. மதசார்பற்ற தன்மையை தமிழக முதல்வர் கடைபிடிக்க வேண்டும் முதல்வர் வாழ்த்து சொல்வதில் பாரபட்சம் காட்ட கூடாது.இதற்கு பதில் கிடைப்பதே இல்லை ஆளுநர்கள் இணை அரசாங்கம் நடத்த பார்க்கவில்லை. துணை அரசாங்கம் நடத்தவே விரும்புகின்றோம். ஆளுநர் செயல்பாடுகளை தவறாக புரிந்து கொள்கின்றனர்