6 கிலோ கஞ்சா கடத்திய அண்ணன், தம்பி கைது..!

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா நேற்று நீலாம்பூர் அவிநாசி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி சந்திப்பு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இந்த தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த லபக் குமார் ( வயது 28) அவரது தம்பி சுருபாபு குமார் ( வயது 23) என்பது தெரிய வந்தது. இவர்கள் அவினாசியில் உள்ள ஒரு நூற்பு மில்லில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.