15 வயது சிறுமிகளை காதலித்து பாலியல் பலாத்காரம். போக்சோவில் 2 பேர் மீது வழக்கு.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயதுசிறுமியை அதே பகுதியை சேர்ந்த சிபிராஜ் என்பவர் காதலித்து வந்தாராம்.இவர்கள் இருவரும் பல இடங்களுக்கு சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அந்த சிறுமி வீட்டில் வாந்தி எடுத்தார் .இதை பார்த்த அவர் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாகஇருப்பதாக கூறினார்கள்.. இது குறித்து சிறுமியின் தாயார் கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் காதலன் சிபிராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.இதேபோல காரமடை பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரிடம் அதே பகுதியில் டிரைவராக வேலை பார்த்து வரும் சூரியா ( வயது 24) என்பவர் நெருங்கி பழகி வந்தாராம் .பின்னர் அந்த சிறுமியை கடத்திச் சென்று பழனியில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.இதில் அந்த சிறுமி கர்ப்பமானார்.இது குறித்து காரமடை போலீசில் சிறுமியின் தாயார் புகார் செய்தார்.போலீசார் சூர்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.