நாய் குறுக்கே பாய்ந்ததால் விபத்து – பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் சாவு..

கோவை மாவட்டம் அன்னூர் செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகரை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 44 ) இவர் நேற்று அன்னூர் ஸ்ரீ பண்ணாரி அம்மன் நூற்பு மில் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் குறுக்கே திடீரென்று ஒரு நாய் பாய்ந்தது. பைக் மீது மோதியதால் சுரேஷ் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு  எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து அன்னூர் போலீசில் அவரது மனைவி வரலட்சுமி புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.