தூக்கு போட்டு 9-ம்வகுப்பு மாணவன் தற்கொலை.

கோவை வடவள்ளி அருகே உள்ள கல்வீரம் பாளையம், விஜய் நகரை சேர்ந்தவர் மாதையன், இவரது மகன் தினேஷ் (வயது 15) இவர் கல்வீரம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 9-ம்வகுப்பு படித்து வந்தார் .நேற்று இவர் அவனது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சமையலறை விட்டத்தில் சேலையைக் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து இவரது தாயார் தீபா வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.