சூலூர் தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா.!!

சூலூர் தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகும் நேரத்தில் சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஹோமத்துடன் கூடிய சிறப்பு பூஜை நடைபெற்றது . இதில் முன்னாள் அமைச்சர் முன்னாள் மேயர் செ. ம. வேலுச்சாமி உள்ளிட்ட பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு குரு பகவானான தட்சிணாமூர்த்திக்கு உண்டான மஞ்சள் நிற ஆடை, கொண்டைக்கடலை உள்ளிட்ட பொருட்களை கொடுத்து வழிபட்டனர். இந்நிகழ்வில் குரு பெயர்ச்சியால் ஏற்படும் 12 ராசிகளுக்கு உண்டான பலன்களை சுருக்கமாக பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பில் எடுத்து சொல்லப்பட்டது .தொடர்ந்து பூமியில் வெப்பத்தின் தாகம் குறைந்து நல்ல மழை பொழிவு ஏற்பட கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது. வருகை தந்த பக்தர்களுக்கு நெய்வேத்தியம் பிரசாதமாக வழங்கப்பட்டது..