வேகத்தடையில் பைக் மோதி கணவருடன் பைக்கில் வந்த மனைவி பரிதாப பலி..

கோவை அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் . இவரது மனைவி ஸ்ரீபிரியா ( வயது 50 ) இவர் நேற்று பைக்கில் தனது கணவருடன் ஜீ.வி . ரெசிடென்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள வேகத்தடையில் பைக் ஏறும் போது திடீரென்று நிலைத்தடுமாறி ஸ்ரீபிரியா கீழே விழுந்தார் .இதில் பலத்த காயம் ஏற்பட்டது . அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன்அளிக்காமல் இன்று காலையில் இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது.  இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.