நடுரோட்டில் திடீரென பற்றி எரிந்த கார்.!!

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள கீரணத்தம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 357 இவர் தனது குடும்பத்தினர் 2பேருடன் நேற்று பொள்ளாச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்றார். பின்னர் மீண்டும் பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஈச்சனாரி சிக்னல் அருகே வந்தபோது திடீரென்று காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்தது உடனே காரை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு கார்த்திகேயன் உட்பட 3 பேரும் கீழே இறங்கினர். பின்னர் திடீரென காரின் முன்பகுதியில்தீப்பிடித்து எறிய தொடங்கியது. தொடர்ந்து கார் முழுவதும் எரிந்தது. இது பற்றி தீயணைப்புபடையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.தொழில்நுட்பக் கோளாறா? அல்லது கடும் வெயில் காரணமாக தீப்பிடித்ததா? என்பது தெரியவில்லை.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.