பைக் மீது அரசு பஸ் மோதி டிரைவர் பரிதாப பலி..

கோவை: நெல்லை மாவட்டம் களக்காடு , காந்திஜி ரோட்டை சேர்ந்தவர் சாகுல் ஹமீது ,இவரது மகன் ஷேக் அப்துல்லா (வயது 30 )இவர் கோவையில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .நேற்று குறிச்சி மெயின் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள பொங்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ் இவரது பைக் மீது மோதியது. இதில் ஷேக் அப்துல்லா படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து கோவை மேற்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஈரோடு மாவட்டம் பவானிசாகரை சேர்ந்த அரசுபஸ் டிரைவர் மகேஷ் குமார் ( வயது 33) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.