சாலை விபத்தில் கணவர் இறந்த விரக்த்தியில் மனைவி தீக்குளித்து தற்கொலை

கோவையை அடுத்த நெகமம் பக்கம் உள்ள ஆலாம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் வீரமுத்து. இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் இறந்து விட்டார். இவரது மனைவி உஷா நந்தினி (வயது 40)கணவர் இறந்த நாள் முதல் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த உஷா நந்தினி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் தனலட்சுமி நெகமம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.