விபசாரம் நடத்தப்பட்ட 2 விடுதிகளுக்கு சீல் – 7 பேர் கைது..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல் நிலைய பகுதியில் தனியார் காட்டேஜ் ஒன்றில் சட்டத்திற்கு விரோதமாக பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய 4 நபர்களை கைது செய்தும்.,

அதேபோல் மற்றொரு தனியார் விடுதியில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்திய பெண் உட்பட 3 நபர்களை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். மேற்படி 2 வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டும், பாதிக்கப்பட்ட 3 பெண்கள் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட 2 தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மேட்டுப்பாளையம் தாசில்தார் மூலம் 2 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டது. இதுபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தனிப்படையினர். சோதனை மேற்கொள்ளப்பட்டு பெண்களை பாலியல் தொழில் குற்றங்களில் ஈடுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ் அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்..