கோவை டெய்லர் வீட்டில் 26 பவுன் நகை, பணம் திருட்டு..!

கோவை குனியமுத்தூர் பி. கே. புதூர் ,கிருஷ்ணசாமி நகர் 2வது வீதியை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 52) டெய்லர். இவர் கடந்த 31 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு விபத்தில் சிக்கிய அவரது தம்பியை பார்க்க குடும்பத்துடன் அவிநாசி சென்று விட்டார். நேற்று வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 26 பவுன் நகைகள் ,ரூ 27 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து முஸ்தபா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..