தாய் கண்டித்ததால் வன கல்லூரி மாணவி தூக்குபோட்டு தற்கொலை..

கோவை தடாகம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் அர்ச்சனா (வயது 21). இவர் மேட்டுப்பாளையம் வன கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று அர்ச்சனா வீட்டில் இருந்து வந்தார். அப்போது அவரது தாய் மற்றும் தந்தை சண்டை போட்டு கொண்டனர். பின்னர் 2 பேரும் சென்றனர். அப்போது அர்ச்சனாவின் தாயார் அவரிடம் சண்டை போடும்போது நீ எனக்கு ஆதரவு தர மாட்டையா என கூறி அவரை கண்டித்தார். இதனால் அர்ச்சனா மன வேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்பேட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.