கோவையில் பெண் டாக்டர் திடீர் மாயம்..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ரோட்டில் உள்ள நொச்சிபாளையம் பிரிவு ,விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி . இவரது மகன் ஸ்ரீநிதி ( வயது 25) எம். பி .பி . எஸ். படித்து முடித்துள்ளார். இவர் கடந்த 3 மாதமாக கோவை மசக்காளி பாளையத்தில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி உள்ளார் .கடந்த 3ஆம் தேதி இவர் காந்திபுரத்துக்கு சென்றவர் மீண்டும் விடுதிக்கு வரவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தந்தை பழனிச்சாமி பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.