மகன் காதலித்து பிரிந்து சென்றதால் விரக்தியில் தந்தை தூக்குபோட்டு தற்கொலை…

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் சக்திவேல் (54). பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டு அவர் பிரிந்து சென்றார்.

இதனை நினைத்து சக்திவேல் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கவுண்டம்பாளையம் அன்னையப்பர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் விஷ்வா (வயது 21). இவர் பி.எஸ்.சி கணினி அறிவியல் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தார். கடந்த 1 வருடமாக வேலை தேடியும் அவருக்கு வேலை அமையவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.