கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை-மர்ம நபருக்கு வலை..!

கோவை போத்தனூர் அருகே உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் குமார் (வயது 42). இவர் அண்ணாபுரத்தில் உள்ள அக்னிமாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்க சென்றார். அப்போது கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இது குறித்து பூசாரி குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.