மகனுக்கு உடல்நிலை சரியில்லாத விரக்தியில் தந்தை தூக்குபோட்டு தற்கொலை..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது
36). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் சிவராமனின் 2 -வது மகன் வினோத்குமார் என்பவர் உடல் நிலை
சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார். அதற்காக வினோத்குமார் மைசூரில் உள்ள
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சிவராமனின் மனைவி தனது மகன் வினோத்குமாரை வழக்கம் போல மைசூருக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
தனது மகனுக்கு உடல் நிலை சரியில்லாததை நினைத்து சிவராமன் மனவேதனை அடைந்து வந்தார். சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் திடீரென
தூக்குப்போட்டு கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரம் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சூலூர் பீடம்பள்ளியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (24). கூலி
தொழிலாளி. இவருக்கும் ரோஜன் தாஜ் என்பவருக்கும் 2 வருடங்களுக்கு முன்பு
திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் ரஞ்சித்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீணடும் தகராறு ஏற்பட்டது. இதனால் ரோஜன் தாஜ் கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
இதனால் மகவேதனை அடைந்த ரஞ்சித்குமார் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு
தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.