கோவை மத்திய சிறை கைதி திடீர் மரணம்..

கோவை : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பர்மா காலனி சேர்ந்தவர் ஜன ரட்சகன் ( வயது 56) கூலி தொழிலாளி. இவர் ஒரு கொலை வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அவரை சிறை காவலர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் வழியில் அவர் இறந்து விட்டார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.