ஏண்டா! இதுக்காடா இவ்வளவு பெரிய கலவரம்… போடா, வாடா என பேசியதால் நண்பரின் தம்பியை கத்தியால் குத்திய வாலிபர் 2 பேர் கைது..!!

கோவை வேலாண்டிப்பாளையம் கோவில்மேடை சேர்ந்தவர் கணேஷ்பாபு (வயது 24).
டிரைவர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (22). தொழிலாளி.
இந்த நிலையில் கணேஷ்பாபுவின் தம்பி கமலேஸ்வரன் (19) என்பவர் அண்ணனின் நண்பர் கார்த்திக்கை மரியாதை இல்லாமல் பேசி வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று கமலேஸ்வரன், கார்த்திக்கு போன் செய்தார். அப்போது அவரை
போடா, வாட என்று பேசி உள்ளார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே
வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி தனது நண்பர் மணிகண்டன் (22) என்பவரை அழைத்து கொண்டு கோவில் மேடு அருகே உள்ள மைதானத்திற்கு சென்றார். அப்போது அங்கு இருந்த கணேஷ்பாபு மற்றும் அவரது தம்பி கமலேஸ்வரனிடம், கார்த்தி தகராறில் ஈடுபட்டார்.
கத்தி குத்து
இது அவர்களுக்கு இடையே கைகலப்பாக மாறியது. 4 பேரும் மாறி மாறி பீர்
பாட்டில், கற்களால் தாக்கி கொண்டனர். அப்போது கார்த்தி தான் மறைத்து
வைத்திருந்த கத்தியை எடுத்து கமலேஸ்வரனை குத்தினார். இந்த தகராறை
பார்த்து அக்கம் பக்கத்தினர் துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலத்த காயம் அடைந்த கார்த்தி மற்றும்
கணேஷ்பாபுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்
இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதில் கமலேஸ்வரன் மற்றும் மணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில்
அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.