பைக் மோதி விவசாயி பரிதாப பலி..

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள வடமங்கலகரை புதூரை சேர்ந்தவர் பழனிசாமி ( வயது 75)விவசாயி, இவர் நேற்று காரமடை – மேட்டுப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார் . அங்குள்ள வேளாங்கண்ணி பஸ் ஸ்டாப் அருகே செல்லும்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு பைக் இவர் மீது மோதியது .இதில் பழனிச்சாமி படுகாயம் அடைந்தார்.அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து மகன் பாரதிராஜா காரமடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பைக் ஓட்டி வந்த சூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.