மதுவை நிறுத்த முடியாததால் மின்வாரிய ஊழியர் தற்கொலை.

கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள தாசநாயக்கன்பாளையம், சண்டமநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 57) மின்வாரியத்தில் போர்மேனாக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் இவரால் மதுவை நிறுத்த முடியவில்லை .இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுவை நிறுத்த முடியாதால் மனம் உடைந்து அவரது வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இதுகுறித்து அவரது மனைவியின் மணி சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..