சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்- போக்ஸோவில் கோவை கல்லூரி மாணவர் கைது..!

கோவை சூலூர் அருகே உள்ள ராசி பாளையம் பகுதியை சேர்ந்தவர 16-வயது சிறுமி. இவரை திடிரென்று காணவில்லை.. இது குறித்து சிறுமியின் தாயார் சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமியை கடத்தியது குனியமுத்தூரைச் சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் குரு பிரசாத் (வயது 19) என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர் கைது செய்யப்பட்டார். இவர் குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார்..ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது .இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..