மனைவி, மகளுடன் பைக்கில் சென்ற மின்வாரிய ஊழியர் பலி..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பாயப்பனூர் ரோடு, பாண்டி நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 56) இவர் மின்வாரியத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அமுதா ( வயது 46) மகள் ஜெய் நந்தினி (வயது 19 ) இவர்கள் 3 பேரும் பைக்கில் அன்னூர் – மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். தென்திருப்பதி நால்ரோடு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது .இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முருகானந்தம் பரிதாபமாக இறந்தார் .மனைவியும் மகளும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இது குறித்து அவரது மனைவி அமுதா காரமடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமார்சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி நாமக்கல் பொன் விழா நகரை சேர்ந்த சர்வேஸ்வரர் (வயது 24) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.