கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம், லட்சுமணன் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் ( வயது 51 )எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 2ஆம் தேதி உப்பிலிபாளையம் ஆண்டாள் நகரில் ஒரு வீட்டில் எலக்ட்ரிகல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி உடலில் காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் .அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து இவரது மனைவி விமலா வேணி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்து உள்ளார் .சப் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் .
வீட்டில் வேலை செய்யும் போது மின்சாரம் தாக்கி எலக்ட்ரிசன் பரிதாப பலி..
![](https://www.newsexpresstamil.com/wp-content/uploads/2022/08/201806200002052200_Electricity-attacked-and-graduate-youth-death-Tried-to-save_SECVPF.jpg)
Leave a Reply