தொண்டாமுத்தூரில் தேர்தல் பாதுகாப்பு போலீஸ் கொடி அணிவகுப்பு.!!

கோவை மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நேற்று 2 கிலோ மீட்டர் தொலைவுள்ள தொண்டாமுத்தூர் சார்பு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதுப்பாளையம் பிரிவு வரை கொடி அணி வகுப்பு நடந்தது. இதில் மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் 200க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இக்கொடி அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.