பைக் மீது டிராக்டர் மோதல் – வாலிபர் பரிதாப பலி..

கோவை செட்டிபாளையம் பக்கம் உள்ள ஒக்கிலி பாளையம், வெள்ளாளர் காலனி சேர்ந்தவர் பாலமுருகன் இவரது மகன் மணி (வயது 23) நேற்று இவர் ஒத்தக்கால் மண்டபம் – பல்லடம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிராக்டர் இவரது பைக் மீது மோதியது. இதில் மணி படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். இது குறித்து செட்டிபாளையம் போலீசில்புகார் செய்யப்பட்டது.இன்ஸ்பெக்டர் மாதையன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஒக்கிலி பாளையத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் பழனிச்சாமி கைது செய்யப்பட்டார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.