பைக் மீது லாரி மோதி கணவருடன் சென்ற மனைவி பரிதாப பலி..

கோவை ஒண்டிபுதூர், எஸ்ஐ.எச் எஸ்காலனி, அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் முஹம்மத் உசேன் (வயது 78) பழைய பேப்பர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று பைக்கில் தனது மனைவி நகமத் நிஷா( வயது 66 )என்பவருடன் பைக்கில் கோவை -திருச்சி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் சிங்காநல்லூர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்ந டிப்பர் லாரி இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இருவரும் படுகாயம் அடைந்தனர்.இதில் மனைவி நகமத் நிஷா அதே இடத்தில் இறந்தார். கணவர் முகமது உசேன் படுகாயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து முகமது உசேன் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரோஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக டிப்பர் லாரி டிரைவர் பீளமேடு. காந்திமா நகரை சேர்ந்த வடிவேல் (வயது 34) என்பவர் கைது செய்யப்பட்டார்.மேலும் விசாரணை நடந்து வருகிறது..