வள்ளலார் நினைவு தினம் முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்..!

கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- நாளை ( ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் நினைவு தினத்தையொட்டி கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபானக்கூடங்கள்,மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள் ,அயல்நாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு மீறி அன்றைய தினம் மதுபானங்களை விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.